“
ஒரு தலித் இளைஞனிடம் சமூகம் எதிர்பார்ப்பது அத்தனையும் இரு மடங்குதான். தூய்மை ஒழுக்கம் அறிவு எல்லாமே இரு மடங்கு இருக்கவேண்டும். அப்படிப்பட்டவர்களிடம்தான் பொதுச் சமூகம் பேசவே தயாராக இருக்கிறது. அவன் குரலும் மொழியும் உடையும் உணவும் நேரடியாக வெளிப்பட்டுவிடவே கூடாது உன்னதமாக்கப்பட்டே வெளிப்படவேண்டும் என்பது ஒரு நிபந்தனையாகவே நம்முன் உள்ளது. அவன் வார்த்தைகளில் வெறுப்போ ஏளனமோ வெளிப்பட்டுவிடவே கூடாது. நம்மால் அப்படி நடந்து கொள்ள முடியுமா? நடந்து கொண்டுதான் ஆகவேண்டும்
”
”
சுரேஷ் பிரதீப் / Suresh Pradheep (ஒளிர்நிழல் / OlirNizhal (Tamil Edition))
“
தலித்துகள் உணர்ச்சி வசப்படுகிறார்கள் தங்களைத் தாங்களே தாழ்வாக எண்ணுகிறார்கள் அல்லது எதிர்த்திசைக்கு நகர்ந்து அனைத்தையும் ஏளனம் செய்கிறார்கள் என்றுதான் பொதுச் சமூகம் நம்மைப் பார்க்கிறது. ஆகவே அவர்களிடம் அவர்கள் மொழியில் பேசுவதே சரி. உடனே அவர்களை நகலெடுக்கச் சொல்கிறாயா என உங்கள் குரல் உயரும். ஏளனம் செய்வதும் தன்னைத் தாழ்வாக உணர்வதும்தான் நகலெடுப்பது. அந்த நகலை நாம் வரலாற்றில் இருந்து எடுத்துக்கொண்டோம்.
”
”
சுரேஷ் பிரதீப் / Suresh Pradheep (ஒளிர்நிழல் / OlirNizhal (Tamil Edition))